z

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. | குறள் எண் - 40

seyarpaala-thorum-arane-oruvarku-uyarpaala-thorum-pazhi-40

202

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

கலைஞர் உரை

"பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்"

மு. வரதராசன் உரை

"ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே."

சாலமன் பாப்பையா உரை

"ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார். "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவர்க்குச் செய்யும் தன்மையுடையன அறச்செயல்களே ஆகும், நீக்கவேண்டிய தன்மையுடையன தீயவைகளான செயல்களேயாகும். "

Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi

Couplet

'Virtue' sums the things that should be done;'Vice' sums the things that man should shun

Translation

Worthy act is virtue done Vice is what we ought to shun

Explanation

That is virtue which each ought to do, and that is vice which each should shun

202

Write Your Comment