z

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. | குறள் எண் - 1117

aruvaai-niraindha-avirmadhikkup-pola-maruvunto-maadhar-mukaththu-1117

216

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

கலைஞர் உரை

"தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!"

மு. வரதராசன் உரை

"குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே."

சாலமன் பாப்பையா உரை

"நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?"

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது. "

Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu

Couplet

In moon, that waxing waning shines, as sports appear,Are any spots discerned in face of maiden here

Translation

Are there spots on the lady's face Just as in moon that changes phase?

Explanation

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?

216

Write Your Comment