z

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து. | குறள் எண் - 957

kutippirandhaar-kanvilangum-kutram-visumpin-madhikkan-maruppol-uyarndhu-957

113

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.

கலைஞர் உரை

"பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்"

மு. வரதராசன் உரை

"உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்."

சாலமன் பாப்பையா உரை

"நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது. "

Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin
Madhikkan Maruppol Uyarndhu

Couplet

The faults of men of noble race are seen by every eye,As spots on her bright orb that walks sublime the evening sky

Translation

The faults of nobly-born are seen Like on the sky the spots of moon

Explanation

As spots on her bright orb that walks sublime the evening sky

113

Write Your Comment